இன்முகம் காட்டி இனிதாய்
பேசி பெரும்பான்மை கருத்தை
கூறிடிவோம்.
யோசனை திரித்து செயலை
மறைத்து இடத்தை மாற்றி
கூறிடுவோம்.
அறிவை காட்டி சாதனை
கூட்டி தோல்வி கழித்து
கூறிடுவோம்.
நடவடிக்கை நலமாய் உண்மை
பலவாய் தன்பொருள் குறைத்து
கூறிடுவோம்.
குற்றமில்லா மனிதனாக அனைவரின்
அன்பும் ஆதரவும் தேடி
அலைந்திடுவோம்.
பிரச்சனை எதிர் கொள்ளாமல்
தூரவே விலகி நாம்
அலைந்திடுவோம்.
நம் வழியில் அனைத்தும்
நடந்திட பிறவழி பார்க்காமல்
அலைந்திடுவோம்.
தொலைத்த சந்தோஷம் காரணம்
அடுத்தவன் என்று கூறி
அலைந்திடுவோம்.
உலகம் கற்பக விருட்சம்
அனைத்தும் கிடைக்கும் என
ஏமாந்தோம்.
வாழ்க்கை சுலபம் நாம்
சாதிப்போம் அதில் என
ஏமாந்தோம்.
இப்பரத்தில் பாரபட்சம் எதிலும்
இல்லை என்றே நம்பி
ஏமாந்தோம்.
இருப்பவர் அனைவரும் நல்லவர்
என வெகுளியாய் நினைத்து
ஏமாந்தோம்.
பொய்களை நிஜமாய் நம்பிய
காலம் போதும் அடைவோம்
விழிப்பு.