வம்பு பேசி
மனம் போன
போக்கில் சென்று
மனத்தை இதயம்
என்று வாழ்க்கை
நடத்தி செயல்
இழந்த ஆத்மா.
உண்டு களித்து
வம்பு பேசி மனம் போன போக்கில் சென்று மனத்தை இதயம் என்று வாழ்க்கை நடத்தி செயல் இழந்த ஆத்மா.
0 Comments
நாற்று நட்டு
நீர் பாய்ச்சி உரம் இட்டு இரவு பகல் கருத்து வைத்து செழித்து வளர பலநாள் காத்திருந்து வைக்கோல் அறுவடை செய்யும் அப்பாவி. விடிவு காலம் எந்த தலைமுறையில்? ஆகாய தாமரை நீரின் மேல் படர் தாமரை ஒளியை மறைக்கும் உருஞ்சு திரை வாடும் இலை அழுகும் நாற்றம் சுத்தம் மறந்த மனித உடல்கள். விழிப்பின் மேல் நம் மனம் ஞானத்தை மயக்கும் மது பானம் சிதையும் அறிவு சீர்குலையும் தெளிவு இன்பம் மறந்த நம் வாழ்வு. Share பாஷோ (மொழிபெயர்ப்பு எனது பார்வையில்) o ஆன்மாக்களின் விழாக்காலம் இன்றுகூட தகன மேடையில் புகை வருகின்றது. o திரும்பு இந்தப் பக்கம் நானும் தனிமையில் இருக்கின்றேன் இலையுதிர்கால மாலைப் பொழுது. o வருடாந்திர சுத்திகரிப்பு மரங்களின் நடுவில் பலத்த காற்று. o சோம்பேறி படுக்கையில் இருந்து எழுந்தது முதல் மழை. o சில நொடிகள் பூக்கள் மேல் தொங்கும் இரவு நிலவு. o சோகத்தில் மூழ்கி என் தனிமையை உணரவைக்கும் மலைக்குயில். o சோறு கொடுத்த நண்பர்கள் இன்று எனது விருந்தினர்கள் நிலவை ரசிக்க. o வயல் குருவிகள் தேயிலைத் தோட்டத்தில் அதன் புகலிடம். o வலுவிழந்த காற்று வண்ணக்கலவை சேர்த்ததா காலம் மாறிப் பூத்த பூக்கள். o கடவுள் சென்றுவிட்டார் எல்லாவற்றிலும் தனிமை இறந்த இலைகள். o என் மனதை அறி ஒரு மலருடன் ஒரு பிச்சைப் பாத்திரம் . o அவை மறக்கச் செய்கின்றன கோடைகால வெப்பத்தை சமவெளியின் காட்டுப் பூக்கள். o இன்று மட்டும் நாம் குழந்தைகளாய் இருப்போம் முதல் மழைத் துளிகள். o குழந்தைகள் பூக்கள் மலர்ந்தன பழத்தோலை உரிக்கின்றேன். o காலை உற்சாகங்கள் அவர்களும் என் நண்பர்களில்லை. o மிதஞ்சூட்டுப் போர்வையில் இறகுகளின் ஆடையில் வாத்தின் கால். o முதல் பனி பாலத்தின் பூச்சு கட்டுமானப் பணியில். o எல்லோரும் செல்கிறார்கள் பாலத்திற்கு நன்றிசொல்லி பனி மூடிய பாதை. o புதர்களின் மறைவில் தேயிலை பறிப்பவர்கள் கேட்டார்களா? குயிலின் குரல். o வாழ்க்கை பயணம் சிறு வயலின் உழவு முன்னும் பின்னும். Share உயிரியல் பூங்கா. தாவும் மனம் சிறகடிக்கும் மகிழ்ச்சி அசைபோடும் எண்ணம் மிரட்டும் கௌரவம் அடைபட்ட வண்ணங்கள் ஊளையிடும் குரல் நீரில் மகிழுமுடல் அசையும் மலை ஊர்ந்துசெல்லும் கள்ளத்தனம் எட்டிப்பறிக்கும் இனம் சிறைப பட்டது உயிரியல் பூங்காவிலா? சமுதாய பூங்காவிலா? பகிர்வு
நான் தலைவனில்லை நான் ஒரு தலைவனில்லை நடத்திச் செல்ல பாதையில்லை அடிமைப் படுத்த தொண்டனில்லை. மயக்க கவர்ச்சி மந்திரமில்லை அபிஷேகம் செய்ய உருவமில்லை பிரபலமாக பண பலமில்லை ஆட்டிப் படைக்க அதிகாரமில்லை. வெற்றிகொள்ள எனக்கு எதிரியில்லை உற்சாகத்தில் மிதக்க பானங்களில்லை இலக்குகள் அடைய லட்சியங்களில்லை ஊறித் திளைக்க உணர்ச்சிகளில்லை பரிதவிக்க மனதில் குழப்பங்களில்லை ஓதி உணர மந்திரங்களில்லை கட்டிக் காக்க சடங்குகளில்லை விழிப்புக் கடலில் நீந்தும் நான் ஒரு வெற்றிடம். பகிர்வு
கடவுளுடன் ஒப்பந்தம் கூவி விற்றான் வியாபாரி வாங்க எனக்கும் ஆசை கிடைக்குமா இது இலவசமாய்? உலகில் எதுவும் கிடைக்காது விலை நீயும் கொடுக்காமல். “கேட்டது அனைத்தயும் தருகிறேன் அதற்கு மேலும் தருகிறேன்” - மேலிருந்து வந்தது குரல் அது ஆண்டவன் குரல். என் கட்டளையை கடைபிடிப்பாய் எனக்கு நீயும் கீழ்ப்படிவாய். காட்டுவேன் உனக்கு சொர்க்கம் இல்லையேல் கிடைக்கும் நரகம். கடவுள் போட்ட ஒப்பந்தம். கட்டிப் போட்டது மனதை. எனக்குள் எழுந்தது சந்தேகம் யார் இந்த கடவுள்?...................
நாளை வராது தேடிச் சேர்த்த தேன்கள் திருடிச் சென்ற மனிதர்கள் மதங்கள் கொடுத்த போதை சொர்க்கம் எனக்கு இறந்தபின் சேர்த்து வைத்த செல்வங்கள் அனுபவிப்போம் நாளை என்று செய்வாய் கடமையை இன்று கிடைக்கும் பலன் மறுபிறவியில் சிறிதாய் மாறுகிரேன் இன்று நல்லவனாவேன் நாளை முழுதாய் என்னிடம் இருக்கும் வன்முறை அஹிம்சை ஆகும் நாளை அந்த நாளையென்றும் வராதே நல்லது எதுவும் செய்யாதே மாற்றம் என்பது இன்றே புரிந்துகொள் அதையும் நீயே.
உண்மையின் மடியில் |
பகிர்வு | மேலும் அறிய |
பகிர்வு | மேலும் அறிய |
என் பெயர் இந்திரன். நான் கட்டுமானப் பணிகளில் ஒரு பொறியியல் வல்லுனராக இருபத்தாறு வருடங்கள் பணி புரிந்த்துள்ளேன். எனக்கு வாழ்கையை பற்றி அறிவதிலும் பயணங்கள் செய்வதிலும் ஆர்வம் உண்டு.
என்னை பற்றிய வலைத் தளம்
http://kolappanindiran.weebly.com/
வாழ்க்கயை பற்றி எனது வலைத் தளம்
http://vettaveli.weebly.com/
பயணங்கள் பற்றிய எனது வலைத் தளம்
http://kolappanindirantravel.weebly.com/
February 2014
December 2013
September 2013
August 2013
July 2013
June 2013