உண்மையின் மடியில்
(சிறு கதை)
மெத்தப் படித்த தத்துவஞானி
மிகுதியான செருக்கு
வென்றான் பண்டிதர்களை வாதத்தில்
ஆக்கினான் சீடர்களாய்
“வெல்ல இனியாருமில்லை எனக்கு
நிகராய் ஒருவனுமில்லை”
புத்தன் புகழ் கேட்டான்
சென்றான் வாதிட
புத்தன் கேட்டான் உண்மை
அறிவாயா என்று
படித்திருக்கிரேன் ஆனால் உணர்ந்ததில்லை
என்றான் ஞானி
“மௌனமாய் இரு என்னுடன்
இரு வருடம்
பின் கேள் உன் கேள்வியை”
இது புத்தன்
வாய்விட்டு சிரித்தான் கஷ்யபன்
இதை கேட்டு
எதற்கு இந்த சிரிப்பு
என்றான் ஞானி
புத்தன் ஏமாற்றுக்காரன் நானும்
ஏமாந்தேன் அவனிடம்
வருடம் இரண்டாகும் “நானும்”
“கேள்வியும்” மறையும்
கேட்பதை இன்றே கேள்
இதுதான் சந்தர்ப்பம்
சம்மதித்தான் ஞானி புத்தனின்
கட்டளைக்கு உடனே
வருடங்கள் இரண்டாயின அழைத்தான்
புத்தன் ஞானியை
உன் கேள்வி என்ன
கூறு இப்பொழுது
கேள்வியும் நானும் மறைந்தோம்
இருப்பது மௌனம்
உணர்ந்தேன் உண்மையை நான்
அடைந்தேன் பேரின்பம்
கண்ணீர் மல்க சரணடைந்தான்
புத்தன் காலடியில்.
மிகுதியான செருக்கு
வென்றான் பண்டிதர்களை வாதத்தில்
ஆக்கினான் சீடர்களாய்
“வெல்ல இனியாருமில்லை எனக்கு
நிகராய் ஒருவனுமில்லை”
புத்தன் புகழ் கேட்டான்
சென்றான் வாதிட
புத்தன் கேட்டான் உண்மை
அறிவாயா என்று
படித்திருக்கிரேன் ஆனால் உணர்ந்ததில்லை
என்றான் ஞானி
“மௌனமாய் இரு என்னுடன்
இரு வருடம்
பின் கேள் உன் கேள்வியை”
இது புத்தன்
வாய்விட்டு சிரித்தான் கஷ்யபன்
இதை கேட்டு
எதற்கு இந்த சிரிப்பு
என்றான் ஞானி
புத்தன் ஏமாற்றுக்காரன் நானும்
ஏமாந்தேன் அவனிடம்
வருடம் இரண்டாகும் “நானும்”
“கேள்வியும்” மறையும்
கேட்பதை இன்றே கேள்
இதுதான் சந்தர்ப்பம்
சம்மதித்தான் ஞானி புத்தனின்
கட்டளைக்கு உடனே
வருடங்கள் இரண்டாயின அழைத்தான்
புத்தன் ஞானியை
உன் கேள்வி என்ன
கூறு இப்பொழுது
கேள்வியும் நானும் மறைந்தோம்
இருப்பது மௌனம்
உணர்ந்தேன் உண்மையை நான்
அடைந்தேன் பேரின்பம்
கண்ணீர் மல்க சரணடைந்தான்
புத்தன் காலடியில்.