ஏழு வயது இருக்கும் அப்பொழுது கிராமத்தில் இருக்கும் எனது பெரியப்பா வீட்டிற்கு கோடை விடுமுறைக்கு செல்லும் போது முதன் முதலாக மிதி வண்டி வாடகைக்கு எடுத்து ஓட்டிப் படித்தேன். சிறுவர்களுக்கான வண்டி அது. சிறுவன் மிதி வண்டி ஓட்டியதை ஆச்சரியமாக பார்த்த காலமது. எல்லோருக்கும் சைக்கிள் வாங்கும் வசதியில்லாத காலம். வாடகைக்குகூட எல்லோரும் மிதி வண்டி எடுத்து ஓட்டுவதில்லை பயம்.
பின் சில வருடங்கள் சென்றபின் அப்பாவின் ‘ராலிஹ்’ வண்டியில் அரை பெடல் (குரங்கு பெடல் ) என்று நாங்கள் அப்பொழுது சொல்வோம். அதில் ஒருமுறை கீழே விழுந்தேன். அனால் கீழே விழுந்த சைக்கிளை எடுக்கும்போது அது என் கை மேல் விழ கை சட்டத்தின் (பிரேம்) நடுவில் மாட்ட எலும்பு முறிந்தது. நாங்கள் அப்பொழுது இருந்தது ராணிப்பேட்டையில். ராணிப்பேட்டை அப்பொழுது சிறிய ஊர். ஒரு கிறித்துவ மிஷன் மருத்துவமனை இருந்தது அங்கே உள் நோயாளியாக இரண்டு வாரம் இருந்தேன். கையை சேர்த்து விட்டார்கள் கட்டு போட்டிருந்தது மேலும் சில வாரங்கள் சென்றபின் கட்டை பிரித்தார்கள். பின்புதான் தெரிந்தது கையை மேலும் கீழும் அசைக்க முடியவில்லை என்று.
அப்பா தெரிந்தவர்களிடம் ஆலோசனை செய்து புத்தூர் செல்லலாம் என்று முடிவெடுத்தார். புகை(ரயில்) வண்டியில் நானும் அப்பாவும் பயணம். மருத்துவரின் வீடு ஒரு ஓட்டு வீடு. சென்றவுடன் கையை பிடித்து பார்த்தார் அப்படியே கையை மடித்தார். சேர்ந்திறுந்த எலும்பு மடாரென்று உடைந்தது வலியில் அலறினேன். எதற்கும் அசையாத எனது தந்தையின் கண்களில் கண்ணீர். ( https://youtu.be/kIUi8mnBP8M) பச்சிலை தடவி எண்ணை விட்டு கட்டு போடப்பட்டது.சில நாட்களில் கை சரியானது. மேலும் சில வருடங்கள் கடந்தன நாகர்கோவில் அதன் பின் தூத்துக்குடி வாசம். அங்கு பள்ளி செல்ல என் அண்ணன்மார்களுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தார் அப்பா. எனக்கோ நடை பயணம். சில சமயம் அண்ணன் சைக்கிளில் பின்னால் வைத்து ஓட்டி செல்வான். மூன்று வருடத்துக்கு பிறகு மீண்டும் நாகர்கோவில் வாசம். அங்குதான் மறுபடியும் அண்ணன்களுடைய சைக்கிளை ஓட்டிப்படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஏழு வயதில் தொடங்கிய பயணம் ஓரளவுக்கு நிறைவுற்றது பதினான்கு வயதில். பின் மூன்று வருடங்கள் சைக்கிளில் பள்ளி செல்ல அனுமதி கிடைத்து (பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு என்பதால்) சொந்த சைக்கிள் வாங்கித்தரவில்லை அப்பா. அண்ணனின் சைக்கிள் மூன்று வருட உபயோகத்திற்கு இரவல்.
காலங்கள் கடந்தன பொறியியல் படிப்பு, கட்டுமானத்துறையில் வேலை குடும்பம் என்று முப்பத்தி மூன்று வருடங்கள் உருண்டோடின. இடைப்பட்ட கால கட்டங்களில் சைக்கிள் ஓட்டும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கார் அல்லது பைக் பயணம்.
என் மகள் பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன் அவளுக்கு ‘லேடி பேர்ட்’ சைக்கிள் வாங்கிக் கொடுத்தேன். சொந்த வேலைகளுக்கு பெரும்பாலும் நடை அல்லது பஸ் பயணம். பின் நாட்களில் ஸ்கூட்டி மற்றும் கார் வாங்கினாலும் சைக்கிள் மட்டும் ஓட்டவே இல்லை.
இன்று எனது ஐம்பத்து ஒன்றாவது வயதில் முதன் முறையாக எனக்கு என்று சொந்தமாக சைக்கிள் வாங்கினேன். இதுவரை நான்கு நாட்கள் தினமும் பதிமூன்று கிலோமீட்டர் சென்றுள்ளேன், இனிமேலும் செல்வேன். இந்த பயணம் நாற்பத்தி நாலு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது. பயணிக்கிறேன் குழந்தைப் பருவத்தை நோக்கி.
பின் சில வருடங்கள் சென்றபின் அப்பாவின் ‘ராலிஹ்’ வண்டியில் அரை பெடல் (குரங்கு பெடல் ) என்று நாங்கள் அப்பொழுது சொல்வோம். அதில் ஒருமுறை கீழே விழுந்தேன். அனால் கீழே விழுந்த சைக்கிளை எடுக்கும்போது அது என் கை மேல் விழ கை சட்டத்தின் (பிரேம்) நடுவில் மாட்ட எலும்பு முறிந்தது. நாங்கள் அப்பொழுது இருந்தது ராணிப்பேட்டையில். ராணிப்பேட்டை அப்பொழுது சிறிய ஊர். ஒரு கிறித்துவ மிஷன் மருத்துவமனை இருந்தது அங்கே உள் நோயாளியாக இரண்டு வாரம் இருந்தேன். கையை சேர்த்து விட்டார்கள் கட்டு போட்டிருந்தது மேலும் சில வாரங்கள் சென்றபின் கட்டை பிரித்தார்கள். பின்புதான் தெரிந்தது கையை மேலும் கீழும் அசைக்க முடியவில்லை என்று.
அப்பா தெரிந்தவர்களிடம் ஆலோசனை செய்து புத்தூர் செல்லலாம் என்று முடிவெடுத்தார். புகை(ரயில்) வண்டியில் நானும் அப்பாவும் பயணம். மருத்துவரின் வீடு ஒரு ஓட்டு வீடு. சென்றவுடன் கையை பிடித்து பார்த்தார் அப்படியே கையை மடித்தார். சேர்ந்திறுந்த எலும்பு மடாரென்று உடைந்தது வலியில் அலறினேன். எதற்கும் அசையாத எனது தந்தையின் கண்களில் கண்ணீர். ( https://youtu.be/kIUi8mnBP8M) பச்சிலை தடவி எண்ணை விட்டு கட்டு போடப்பட்டது.சில நாட்களில் கை சரியானது. மேலும் சில வருடங்கள் கடந்தன நாகர்கோவில் அதன் பின் தூத்துக்குடி வாசம். அங்கு பள்ளி செல்ல என் அண்ணன்மார்களுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தார் அப்பா. எனக்கோ நடை பயணம். சில சமயம் அண்ணன் சைக்கிளில் பின்னால் வைத்து ஓட்டி செல்வான். மூன்று வருடத்துக்கு பிறகு மீண்டும் நாகர்கோவில் வாசம். அங்குதான் மறுபடியும் அண்ணன்களுடைய சைக்கிளை ஓட்டிப்படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஏழு வயதில் தொடங்கிய பயணம் ஓரளவுக்கு நிறைவுற்றது பதினான்கு வயதில். பின் மூன்று வருடங்கள் சைக்கிளில் பள்ளி செல்ல அனுமதி கிடைத்து (பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு என்பதால்) சொந்த சைக்கிள் வாங்கித்தரவில்லை அப்பா. அண்ணனின் சைக்கிள் மூன்று வருட உபயோகத்திற்கு இரவல்.
காலங்கள் கடந்தன பொறியியல் படிப்பு, கட்டுமானத்துறையில் வேலை குடும்பம் என்று முப்பத்தி மூன்று வருடங்கள் உருண்டோடின. இடைப்பட்ட கால கட்டங்களில் சைக்கிள் ஓட்டும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கார் அல்லது பைக் பயணம்.
என் மகள் பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன் அவளுக்கு ‘லேடி பேர்ட்’ சைக்கிள் வாங்கிக் கொடுத்தேன். சொந்த வேலைகளுக்கு பெரும்பாலும் நடை அல்லது பஸ் பயணம். பின் நாட்களில் ஸ்கூட்டி மற்றும் கார் வாங்கினாலும் சைக்கிள் மட்டும் ஓட்டவே இல்லை.
இன்று எனது ஐம்பத்து ஒன்றாவது வயதில் முதன் முறையாக எனக்கு என்று சொந்தமாக சைக்கிள் வாங்கினேன். இதுவரை நான்கு நாட்கள் தினமும் பதிமூன்று கிலோமீட்டர் சென்றுள்ளேன், இனிமேலும் செல்வேன். இந்த பயணம் நாற்பத்தி நாலு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது. பயணிக்கிறேன் குழந்தைப் பருவத்தை நோக்கி.